Wednesday 29 August 2012

நற்பேறு பெற்றோர்

நற்பேறு  பெற்றவர் யர்ர்?-
  அவர் பொல்லாரின்  சொல்லின்படி நடவாதவர் :
பாவிகளின் தீயவழி நில்லாதவர் :
   இகழ்வாரின் குழுவினில் அமராதவர் :
ஆனால்.அவர் ஆண்டவரின்
   திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர் :
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் :
   அவர் நீரோடையோரம்
நடப்பட்ட  மரம் போல் இருப்பார் :
  பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய்
இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்:
  தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்:

ஆனால்,பொல்லார் அப்படி இல்லை :
  அவர்கள் காற்று அடித்துச் செல்லும்
பதரைப்போல் ஆவர்:
  பொல்லார் நீதிதீர்ப்பின்போது   நிலைநிற்கமட்டார்:
பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார் .
   நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார் :
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும் .
   (திருப்பாடல்கள் 1 : 1-6)